Monday 26 August 2013

என்று தணியும் எம் தண்ணீர் தாகம் ?


என்று தணியும் எம் மக்களின் தண்ணீர் தாகம்...?




தண்ணீர் ...தண்ணீர்...தண்ணீர்.....

எமக்கு கிடைக்கவில்லை அந்த தண்ணீர்!

கண்ணீர் ...கண்ணீர்...கண்ணீர்...

எவரும் துடைக்கவில்லை எமது கண்ணீர்!

தண்ணீருக்காய் நாங்கள் வடிக்கும் கண்ணீருக்கே 

பொறுக்கவில்லை எங்களின் துயரம்....

செழிக்கும் தமிழகத்தில் ....

தமிழன் தண்ணீருக்காய் அலையும் நிலை கண்டு

தவிக்கிறதே என் நெஞ்சம்!

காசு கொடுத்து தண்ணீர் குடித்து

தரணியில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனரே

என் தமிழ் உறவுகள்....

குடிக்க குவளையிலே தண்ணீர் இன்றி

குவளயத்தில் குருகிக் கிடக்கின்றனரே

என் தமிழ் உறவுகள்...

என்று தணியும் எம் ஏழைகளின் தண்ணீர் தாகம்....

காட்டு விலங்குகளுக்கு தண்ணீர் தரட்டும்...

அது முக்கியம்...

ஆனால் அதனினும் முக்கியம் நாட்டு மக்களுக்கு

 தண்ணீர் தர வேண்டியது அன்றோ...

நட்சத்திர ஓட்டலில் சொகுசாக தங்கி

குளிர் தண்ணீர் குடிக்கும் 

நம் அரசியல் தலைவர்களுக்கு தெரியுமா

தண்ணீருக்காய் நம் மக்கள் வடிக்கும் கண்ணீர்?

அலைந்து திரிந்தும் நல்ல தண்ணீர் கிடைக்காமல்

அல்லலுரும் எம் மக்களின் தாகம் என்று தணியும்....?

என்று தணியும் எம் மக்களின் தண்ணீர் தாகம்...?


                                                                                                                            - தைரியம் 

0 comments: