Monday 26 August 2013

மாறுவானா என் மகன்...?

இன்று புரட்சித் தாயின் திருநாள்

தன் ஒரே மகனின் மனமாற்றத்திற்காய்

செபம் பல செய்து, தவம் பல புரிந்து

"மாறுவான் என் மகன்" என காத்திருந்து

மாற்றமும் கண்ட ஒரு புரட்சிப் பெண்ணின் புனித நாள்!

ஆம்...புனித மோனிகாவின் திருநாள்!

தீய வழியில் சென்ற தன் மகனை மீட்க

அவர் பட்ட அல்லல்கள் ஆயிரம் ஆயிரம்...

அன்று மட்டும் அல்ல...

இன்றும் தான் எத்தனையோ
தாய் மார்கள்

தங்களின் பிள்ளைகளைத் தொலைத்துவிட்டு

பிள்ளைகளின் மனமாற்றத்திற்காய் காத்திருக்கின்றனர்...

"மாறுவான் என் மகன்" என ஏங்கித் தவிக்கும்

அம்மாக்கள் ஆயிரம் ஆயிரம்...

பத்து மாதம் தன் கருவிலே சுமந்த தியாகத்தின் உருவாம்

தாயை மதிக்க மறக்கின்றனரே
மறுக்கின்றனரே பிள்ளைகள்

மகன்களின் மனமாற்றத்திற்காய் ஏங்கும்

தாய்களின் தியாகம் ஜெயிப்பது எப்போது?

புரட்சித் தாய்களின் புண்ணிய வாழ்வு

பிள்ளைகளின் மன மாற்றத்திற்கு வித்திடட்டும்....

தாய்களின் செபமும், தவமும், தியாகமும்

பிள்ளைகளின் புது வாழ்வுக்கு சத்திடட்டும்!!

0 comments: