My dear YOIs after celebrating Ria's birthday. LONG LIVE YOI..!

With my Jesuit Friends in Pune.

With My Jesuit Family in Kodaikanal after our Summer Meet, 2015.

Enacting in the SSU play 'It's Great to be Young' directed by beloved Cyril Desbruslais.,SJ.

Clicked during my visit to Liverpool.

Monday 4 November 2013

இணைபிரியா...எம் அக்கா....இசைப்பிரியாவே....!

புரட்சிப் புதல்வியே....
இணையத்தில்
உம் துயரம்
படிக்கின்ற போது
இதயத்தில்
உம் தியாகம்
துடிக்கின்றதே!
மாணவர்
என்ற மாண்பிலே
படிக்கின்ற சமுதாயம்
உனக்காக நாளும்
துடிக்கின்ற போது!
அரசியல்
என்ற பெயரிலே
நடிக்கின்ற சமுதாயம்
தனக்காக நாளும்
நடிக்கின்றதே!
இணைபிரியா
எம் அக்கா
இசைப்பிரியாவே...
உன் இழப்பை எண்ணி
தவிக்கிறது நாளும்
தன்மானமுள்ள
தமிழ் சமூகம்!
தமிழுக்காய்...
எம் ஈழத்தமிழருக்காய்
தன்னுயிரைக்  கொடுத்தாயே
எம் தியாகத்தலைவியே...!
அன்று உம்மை
உருக்குலைத்து
உயிரெடுத்தனர்
உயிர் உயர்வு
தெரியாத அரக்கர்கள்!
ஆனால்...
இன்று எம்மை
அழிக்க நினைத்தாலும்
அழிக்க இயலாது
ஒழிக்க நினைத்தாலும்
ஒழிக்க இயலாது!
ஏனெனில்
இணைபிரியா
எம் அக்கா
இசைப்பிரியாவே!
இன்று யாம்
உம்மை எம் இதயத்தில்
அணையாது சுமக்கிறோம்!
தமிழ் ஈழமே
தனித்தீர்வு என
தணியாது நடக்கிறோம்!
புரட்சிப் புதல்வியே
நீர் ஏற்றிய புரட்சித்தீ
அணையாது காப்போம்
அதற்காக யாம்
அயராது உழைப்போம்..!

தீபாவளி.....



தீபாவளி......தீராவலி.....


ஒவ்வொரு வருடமும்
வந்து செல்லும் 
வாடிக்கைத் திருநாள்!
வாடிக்கை நாளில்
வேடிக்கை பார்க்கும் 
கேடிக்கை வேண்டாம் இன்று!
தீபத்தின் திருவிழா அன்று
சிறிது சிந்திப்போம் நன்று!
ஊரெல்லாம் ஒரே வெடிச்சத்தம்
காணும் இடமெல்லாம்
காகிதக் குப்பைகள்!
கேட்கும் ஒலியெல்லாம்
பட்டாசு சப்தங்கள்!
சுவாசிக்கும் காற்றெல்லாம்
பட்டாசு மாசுக்கள்!
முகநூலின் அகமெல்லாம்
திருவிழா வாழ்த்துக்கள்!
பலவற்றை பார்க்கின்ற நான் 
சிலவற்றை பார்த்திட மறந்தேனே....!
ஒளியில் கொண்டாடுகிறது ஒரு கூட்டம்...
வலியில் திண்டாடுகிறது ஒரு கூட்டம்...
"
திண்டாடும் வலிகள்தான் 
கொண்டாடும் ஒளிகளுக்கு காரணம்"
மறக்க நினைக்கிறதே மனித மனம்!
ஆம்....
குதூகல கொண்டாட்டத்திலே
குழந்தைகளின் திண்டாட்டத்தை
மறந்துவிடுகிறதே மனித இனம்....!
ஏனென்றால்....
இதுதான் மனித குணம்...!
பச்சிளம் பிஞ்சுகளின்
வலிகள் தானே....
பட்டாசு குச்சிகளில்
ஒளிகள் தந்தன...!
தீபத்தின் திருநாளிலே...
எல்லோரையும் 
ஒளியில் வாழ வழி செய்து
ஒளியில்லா கூரையிலே
வேறு வழியில்லாமல்
இருளில் வாடி
பட்டாசு செய்யும்
பச்சிளம் பிஞ்சுகள்
ஒளியைக் காண்பது 
எப்போது...யாரால்...?
தீபத்தை ஏற்றும் போது
கொஞ்சம்...
சிந்திக்கலாமே உறவுகளே...?
இத்தீபாவளி தீர்க்குமா
இளசுகளின் தீராவலியை....?


*************