Sunday 27 October 2013


நினைக்க...உன்னை நினைக்க...




கலைந்த கனவுகள்...


மறைந்த நினைவுகள்...


உதிர்ந்த உறவுகள்...


உடைந்த சிறகுகள்...


கடந்த நிகழ்வுகள்...


நடந்த பாதைகள்...

எல்லாம் என்னிலே

இல்லையெனினும்

இறைவா...

உன்னை நினைக்கையிலே....

கலைந்த கனவுகள்

நினைவுக்கு வருகின்றன !

உதிர்ந்த உறவுகள்

உயிர் பெறுகின்றன !

உடைந்த சிறகுகள்

ஒட்டிக் கொள்கின்றன !

கடந்த நிகழ்வுகள்

கண்முன் வருகின்றன !

நடந்த பாதைகள்

நன்றாய்த் தெரிகின்றன !

நினைக்க...

உன்னை மட்டுமே நினைக்க

ஓர் வரம் தா இறைவா...!

*******

0 comments: