Monday 4 November 2013

இணைபிரியா...எம் அக்கா....இசைப்பிரியாவே....!

புரட்சிப் புதல்வியே....
இணையத்தில்
உம் துயரம்
படிக்கின்ற போது
இதயத்தில்
உம் தியாகம்
துடிக்கின்றதே!
மாணவர்
என்ற மாண்பிலே
படிக்கின்ற சமுதாயம்
உனக்காக நாளும்
துடிக்கின்ற போது!
அரசியல்
என்ற பெயரிலே
நடிக்கின்ற சமுதாயம்
தனக்காக நாளும்
நடிக்கின்றதே!
இணைபிரியா
எம் அக்கா
இசைப்பிரியாவே...
உன் இழப்பை எண்ணி
தவிக்கிறது நாளும்
தன்மானமுள்ள
தமிழ் சமூகம்!
தமிழுக்காய்...
எம் ஈழத்தமிழருக்காய்
தன்னுயிரைக்  கொடுத்தாயே
எம் தியாகத்தலைவியே...!
அன்று உம்மை
உருக்குலைத்து
உயிரெடுத்தனர்
உயிர் உயர்வு
தெரியாத அரக்கர்கள்!
ஆனால்...
இன்று எம்மை
அழிக்க நினைத்தாலும்
அழிக்க இயலாது
ஒழிக்க நினைத்தாலும்
ஒழிக்க இயலாது!
ஏனெனில்
இணைபிரியா
எம் அக்கா
இசைப்பிரியாவே!
இன்று யாம்
உம்மை எம் இதயத்தில்
அணையாது சுமக்கிறோம்!
தமிழ் ஈழமே
தனித்தீர்வு என
தணியாது நடக்கிறோம்!
புரட்சிப் புதல்வியே
நீர் ஏற்றிய புரட்சித்தீ
அணையாது காப்போம்
அதற்காக யாம்
அயராது உழைப்போம்..!

3 comments:

Zenith SJ said...

Thank you anna for sharing this to everybody. Your poem surely will kindle others.

Please publish it in any of the news paper or article. May God bless you.

Unknown said...

hi thambi, i join with you expressing my solidarity, pain and pay homage to Isai Priya. May her death bring forth life and freedom to our suffering brothers and sisters.

Unknown said...

Very Good Thayrium it's very much disheartening to hear that, but it's also a call to all those who strive for the welfare of others!!!! Thanks for this inspiration!