Thursday 5 September 2013

ஆயுதம் ஒழித்திட... அமைதியை வளர்த்திட...


ஆயுதம் ஒழித்திட...
அமைதியை வளர்த்திட...
எங்கே சென்றது எம் அமைதி...?
அறிவியல் வளர்ந்து விட்டது
மனிதனின் அறியாமை குறையவில்லையே!
ஆன்மீகம் வளர்ந்து விட்டது
மனிதனின் ஆணவம் குறையவில்லையே!
இயந்திரம் வளர்ந்து விட்டது
மனிதனின் இல்லாமை குறையவில்லையே!
அதிகாரம் வளர்ந்து விட்டது
மனிதனின் அகங்காரம் குறையவில்லையே!
பணபலம் வளர்ந்து விட்டது
மனிதனின் பாசாங்கு குறையவில்லையே!
இல்லாமையிலும், இயலாமையிலும்
அறியாமையிலும், ஆணவத்திலும்
அமைதியை அன்றோ இழந்துவிட்டனர் மனிதர்கள்?
அமைதியை மறந்து ஆயுதத்தை கையிலெடுத்தால்
நாம் இழப்பது நம் அமைதியைத்தானே?
அமைதியில் இருப்பது எத்துணை உயரிய ஆன்மீகம்!
அதிகார பலத்தையும்,
ஆயுத பலத்தையும்
கையில் கொண்டால் அழிக்கலாமோ
அண்டை நாட்டினரை?
நாடு வேறு என்றாலும்,
நாகரிகம் வேறு என்றாலும்
சாதி வேறு என்றாலும்,
சமுதாயம் வேறு என்றாலும்
மனிதர்கள் என்ற வகையிலே
நாம் அனைவரும் சமம் தானே?
மனிதர்கள் நாம் மகிழ்வினில் வாழ
அவசியம் அமைதி அன்றோ!
அவசியமான அமைதியை அனுதினமும்
அதிகாரத்தின் பெயரிலும், ஆணவத்தின் பெயரிலும்
நாமே அழிப்பது அநீதி அன்றோ!
அழிய வேண்டும் அமைதியை அழிக்கும் அவல நிலை
அமைதியை சீர்குலைக்கும் ஆயுதங்களை வெறுத்திடுவோம்!
அமைதியின் கனியினை வாழ்வினில் தினம் அறுத்திடுவோம்!
ஆயுதம் ஒழித்திட...
அமைதியை வளர்த்திட...
அனுதினம் நாமும் யாசிப்போம்!

2 comments:

John Mike sj said...

it is really good very moving dear thayriam

congrats we pray for peace in Syria

gsthayriam said...

Thank you so muchna....i am inspired by your comments