Sunday 27 October 2013

மாணவ சக்தியே...மகத்தான சக்தி...

மாணவ சக்தியே...மகத்தான சக்தி...



என் இனம் அழிய...

இந்தியா மட்டும் அல்ல 
தமிழ் நாட்டில் தமிழருக்காய்
என்று சொல்லிக் கொண்டு
தன்னலம் மட்டுமே கருதி 
தமிழர்களின் குருதி குடித்து
கொளுத்துக்கொண்டிருக்கும்
நம் அரசியல் வாதிகளின் அநியாய சதியும்தான் இது....
எழுந்திடு என் தமிழ் இனமே....
காசுக்காக கட்சியிலே
காலத்தை கடத்தியது போதும் என் தமிழ் உறவுகளே...
நம் தமிழ் இன விடுதலைக்காகவது
கட்சியைக் கடந்து
தமிழர்களாய் ஒன்று சேர்வது எப்போது...?
மாணவ சமுதாயமே மயங்கி விடாதே
கட்சியாளர்களின் வெற்றுப்பேச்சில்...
மயங்கினால் போதும்
மாணவ சக்தியை கட்சிக்காக பயன்படுத்தி
ஆட்சியைப் பிடித்துக் கொண்டு
பின் நம்மவரை சிறையினில் அடைக்கவும் தயங்காது....
நம் இனம் செழிக்க மாணவ சக்தியே மகத்தான சக்தி.....
தொடர்ந்து குரல் கொடுப்போம்...
உயிர் இருக்கும் வரை உணர்ந்து குரல் கொடுப்போம்....
*******

0 comments: