Monday 4 November 2013

தீபாவளி.....



தீபாவளி......தீராவலி.....


ஒவ்வொரு வருடமும்
வந்து செல்லும் 
வாடிக்கைத் திருநாள்!
வாடிக்கை நாளில்
வேடிக்கை பார்க்கும் 
கேடிக்கை வேண்டாம் இன்று!
தீபத்தின் திருவிழா அன்று
சிறிது சிந்திப்போம் நன்று!
ஊரெல்லாம் ஒரே வெடிச்சத்தம்
காணும் இடமெல்லாம்
காகிதக் குப்பைகள்!
கேட்கும் ஒலியெல்லாம்
பட்டாசு சப்தங்கள்!
சுவாசிக்கும் காற்றெல்லாம்
பட்டாசு மாசுக்கள்!
முகநூலின் அகமெல்லாம்
திருவிழா வாழ்த்துக்கள்!
பலவற்றை பார்க்கின்ற நான் 
சிலவற்றை பார்த்திட மறந்தேனே....!
ஒளியில் கொண்டாடுகிறது ஒரு கூட்டம்...
வலியில் திண்டாடுகிறது ஒரு கூட்டம்...
"
திண்டாடும் வலிகள்தான் 
கொண்டாடும் ஒளிகளுக்கு காரணம்"
மறக்க நினைக்கிறதே மனித மனம்!
ஆம்....
குதூகல கொண்டாட்டத்திலே
குழந்தைகளின் திண்டாட்டத்தை
மறந்துவிடுகிறதே மனித இனம்....!
ஏனென்றால்....
இதுதான் மனித குணம்...!
பச்சிளம் பிஞ்சுகளின்
வலிகள் தானே....
பட்டாசு குச்சிகளில்
ஒளிகள் தந்தன...!
தீபத்தின் திருநாளிலே...
எல்லோரையும் 
ஒளியில் வாழ வழி செய்து
ஒளியில்லா கூரையிலே
வேறு வழியில்லாமல்
இருளில் வாடி
பட்டாசு செய்யும்
பச்சிளம் பிஞ்சுகள்
ஒளியைக் காண்பது 
எப்போது...யாரால்...?
தீபத்தை ஏற்றும் போது
கொஞ்சம்...
சிந்திக்கலாமே உறவுகளே...?
இத்தீபாவளி தீர்க்குமா
இளசுகளின் தீராவலியை....?


*************

1 comments:

Zenith SJ said...

painful to see this situation. We, the Scholastics should encourage others not to buy crackers.

Thank you anna for posting this.......