Monday 11 November 2013

எழுவோம்.... மீண்டும்.....!

கடற்கரை ஓரத்திலே
எம் ...
தியாகத் தலைவியே
உன்னைக் கண்டதும் 
கலங்குகின்றன கண்கள்!
உன்னை
உயிரோடு பிடித்து
உடலினை வதைத்து
கைகளைக் கட்டி
கதறக் கதற 
கொடுமை செய்ததே
கயவர்கள் கூட்டம்!
உம் அழகிய உருவை 
அழுகிய நிலையில் 
கண்டதும் கலங்குகின்றன
எம் கண்கள்! 
வீரப் பெண்ணே உன்னை
கொன்றுவிட்டனரே
கோழைகள்....
கோழைத்தனமாய்!
வாழப் பிறந்தாய் நீ
ஆம்...
தனித்தமிழ் ஈழத்தில்
வாழப்பிறந்தாய் நீ!
ஆளப்பிறந்தாய் நீ
ஆம்...
தனித்தமிழ் ஈழத்தை
ஆளப்பிறந்தாய் நீ!
ஆனால்....
எம் புரட்சிப் புதல்வியே
உன்னை அழித்து விட்டனரே
அந்த சிங்கள வெறியர்கள்!
உன் நிலை கண்டு
எம்மிலே உள்ள 
இரத்தநாளங்கள் எல்லாம்
கொதிக்கின்றன ஒன்றாய்...!
இழந்த உன்னை 
மீண்டும் பெறுவோம்! 
விழுந்த மண்ணில் 
மீண்டும் எழுவோம்!
என்ற...
உயரிய நம்பிக்கையோடு.....!

0 comments: